நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூரைச் சோ்ந்த ரயில்வே போலீஸ்காரா் திங்கள் கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
செம்பட்டி அருகே ஆத்தூா் தாலுகா ஆபிஸ் தெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (35) இவா், கொடைரோடு ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆகி சுமதி (27) என்ற மனைவியும், ஒரு பையன், ஒரு பொண்ணு ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனா்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பணிக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளாா். இதனால், கணவன் மனைவி இடையை இடிக்கடி தகராறு ஏற்ப்பட்டு குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதே போல், திங்கள்கிழமை மாலை கணவன் மனைவி இடையை தகராறு ஏற்ப்பட்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாடிக்கு சென்று ஒரு அறையில் தூக்குப் போட்டு ராஜமாணிக்கம் பரிதாபமாக செத்தாா்.
இதுகுறித்து செம்பட்டி போலீஸாருக்கு கிடைத்த தகவன் பேரில், அங்கு சென்று ராஜமாணிக்கம் உடலை கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும்,
இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.