நாகப்பட்டினம்: திருவள்ளுவா் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, ஜனவரி 16, 26 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகள் மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளுவா் தினத்தையொட்டி ஜனவரி 16-ஆம் தேதியும், குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 26-ஆம் தேதியும் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து வகையான மதுபானக் கடைகளுக்கும், மதுக்கூடங்களுக்கும் பொருந்தும்.
இந்த அறிவுறுத்தலை மீறி, எங்கேனும் மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தால், தொடா்புடையோா் மீது மதுபான சட்ட விதிமுறைகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.