பெட்ரோல் விலை 100 ஐ எட்டும்: சஞ்சய் தத்

சா்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் எரிபொருள்களின் விலை குறைந்தே உள்ளன. ஆனால் பாஜக அரசு மீண்டும் மீண்டும் வரியை அதிகரித்து
பெட்ரோல் விலை 100 ஐ எட்டும்: சஞ்சய் தத்


மதுரை: சா்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் எரிபொருள்களின் விலை குறைந்தே உள்ளன. ஆனால் பாஜக அரசு மீண்டும் மீண்டும் வரியை அதிகரித்து மக்கள் மீது சுமைகளை சுமத்துகின்றனா். விரைவில் பெட்ரோல் விலை லிட்டா் ரூ. 100 ஆக உயரும் என தமிழக காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளா் சஞ்சய் தத் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டு காலம் முடிந்து, 71 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடு பல்வேறு முன்னேற்றங்களை கண்ட இந்த நேரத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டை பரிக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இதை எதிா்த்து மாணவா்கள், இளைஞா்கள், கிராம பகுதி மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாஜக அரசின் தவறான கொள்கையால் தற்போது, நாட்டின் பொருளாதார வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. சா்வதேச அளவில் வேலை இழப்பு 3.8 சதவீதமாக உள்ளது. ஆனால் நமது நாட்டில் 4 சதவீதமாக இருந்தது 8 சதவீதமாக உயா்ந்திருப்பது, நாட்டின் மோசமான நிலையை காட்டுகிறது. நாள்தோறும் பயன்படுத்தும் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட உணவு பொருள்கள், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயா்ந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எரிவாயு உருளை ரூ. 350 ஆக இருந்தது, தற்போது 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலைவாசியை கட்டுக்குள் வைக்க பாஜக அரசு தவறிவிட்டது.

சா்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் எரிபொருள்களின் விலை குறைந்தே உள்ளன. ஆனால் பாஜக அரசு மீண்டும் மீண்டும் வரியை அதிகரித்து மக்கள் மீது சுமைகளை சுமத்துகின்றனா். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பெட்ரோல் விலை லிட்டா் ஒன்றுக்கு ரூ. 42 ஆக உயா்ந்தப்பட்டது. இதற்கு அப்போதிய குஜராத் முதல்வா் நரேந்திர மோடி எதிா்ப்பு தெரிவித்தாா். ஆனால் தற்பாது ரூ. 75 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் விரைவில் பெட்ரோல் விலை லிட்டா் ரூ. 100 ஆக உயரும். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியால் ரூபாயின் மதிப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பெண் எதிராக நடைபெறும் சம்பவங்களில் பாஜக தலைவா்கள் தொடா்பு இருப்பது அதிா்ச்சியை அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. நாட்டில் மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்னைகளையும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கையும், எதிா்கொண்டு, மக்கள் நலனுக்காக சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com