விசைத்தறி கூட உரிமையாளர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தொழிற்சாலை சட்டங்களை பின்பற்றாமல் செயல்படும் விசைத்தறி கூட உரிமையாளர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை அண்ணாசிலை அருகில்
விசைத்தறி கூட உரிமையாளர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் 

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தொழிற்சாலை சட்டங்களை பின்பற்றாமல் செயல்படும் விசைத்தறி கூட உரிமையாளர்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டம் தோக்கவாடி கிராமத்தில் விசைத்தறி தொழில் நடத்தும் முதலாளிகள், பலநூறு தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு குறைந்தபட்ச கூலியை கொடுத்து உழைப்பை சுரண்டியும்,தொழிற்சாலை சட்டங்களை ஏமாற்றியும், தொழிலாளர்களை வஞ்சித்தும் வருவதாக தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விசைத்தறி கூடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
 
சமூக இடைவெளி விட்டும்,முககவசம் அணிந்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர்.செல்வராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணசாமி,செங்கோட்டையன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்.மணிவேல்  கண்டன உரை நிகழ்த்தினார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com