சென்னை: தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞராக முன்னாள் தலைமை வழக்குரைஞரான ஏ.எல்.சோமயாஜியை தமிழக அரசு நியமித்துள்ளது.
அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞர் என்ற பதவியை தற்போது புதிதாக உருவாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த பதவியில், முன்னாள் தலைமை வழக்குரைஞரான ஏ.எல்.சோமயாஜியை நியமித்து உத்தரவிட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதலின் பேரில் தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர் தமிழக அரசு தொடர்புடைய சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சிக்கலான தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவார் என்றும், அவருக்கு, அரசு தலைமை வழக்குரைஞருக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு நிகரான ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.