பிளஸ் 1 தேர்வு: மாநில அளவில் திருப்பூர் 5 வது இடம்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் 97.41 சதவீத  தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 5 ஆவது இடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது.
பிளஸ் 1 தேர்வு: மாநில அளவில் திருப்பூர் 5 வது இடம்
பிளஸ் 1 தேர்வு: மாநில அளவில் திருப்பூர் 5 வது இடம்

திருப்பூர்: பிளஸ் 1 பொதுத் தேர்வில் 97.41 சதவீத  தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 5 ஆவது இடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் பிளஸ் 1 தேர்வானது கடந்த மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 215 பள்ளிகளைச் சேர்ந்த 11,615 மாணவர்களும், 14,007 மாணவிகள் என மொத்தம் 25,622 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதியிருந்தனர்.

இதில், மாணவர்கள் 11,208 பேர், மாணவிகள் 13,750 பேர் என மொத்தம் 24,958 பேர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாவட்டம் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 97.41 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 5 ஆவது இடத்தைப் பிடித்தது.

அதே வேளையில் கடந்த 2018-19 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் 97.93 சதவீதமும், 2017-18 ஆண்டில் 96.4 சதவீதமும் பெற்று இரு ஆண்டுகளும் தொடர்ந்து தமிழக அளவில் 2 ஆம் இடத்தைப் பிடித்திருந்தது திருப்பூர்.

இந்த நிலையில், தற்போது மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் 3 இடங்கள் பின்தங்கியுள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டில் 121 பள்ளிகளும், 2018 ஆம் ஆண்டில் 96 பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் நிகழாண்டு 103 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com