உலக சுற்றுச்சூழல் தினம்: கமலாலயக் குளம் சுத்தப்படுத்தும் பணி

திருவாரூரில் கமலாலயக் குளக்கரையில் சுத்தப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம்: கமலாலயக் குளம் சுத்தப்படுத்தும் பணி

திருவாரூர்: திருவாரூரில் கமலாலயக் குளக்கரையில் சுத்தப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குட்பட்ட  கமலாலயக் குளத்தின் கரைகளில் இருந்த குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. அத்துடன் படித்துரையில் இருந்த குப்பைகளும் அகற்றப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மைப்படுத்தப்பட்டது. 

திருவாரூர் நகராட்சியுடன் இணைந்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உலக சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம்,  திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம் ஆகியவை இந்தப் பணிகளைச் செய்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com