திருவாரூர்: திருவாரூரில் கமலாலயக் குளக்கரையில் சுத்தப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குட்பட்ட கமலாலயக் குளத்தின் கரைகளில் இருந்த குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. அத்துடன் படித்துரையில் இருந்த குப்பைகளும் அகற்றப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மைப்படுத்தப்பட்டது.
திருவாரூர் நகராட்சியுடன் இணைந்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உலக சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், திருவாரூர் அறநெறி லயன்ஸ் சங்கம் ஆகியவை இந்தப் பணிகளைச் செய்தன.