சென்னையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெற வசதியாக சிறப்பு பேருந்துகள்

சென்னையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நுழைவுச் சீட்டை (ஹால்டிக்கெட்) பெறுவதற்காக சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: சென்னையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நுழைவுச் சீட்டை (ஹால்டிக்கெட்) பெறுவதற்காக சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் தேர்வு நுழைவுச் சீட்டை (ஹால்டிக்கெட்) பெறுவதற்காக சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது.  மாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த பேருந்துகளில் கட்டணமின்றியும், ஆசிரியர்கள் பயண சீட்டு பெற்று பயணிக்கலாம். பிற பயணிகளுக்கு அனுமதி இல்லை. 

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, ஒரு பேருந்தில் 24 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்தை எளிதில் அடையாம் கண்டு கொள்வதற்காக பேருந்துகளின் முகப்பு பகுதியில் பள்ளிக்கல்வித்துறை என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். பேருந்துகள் திங்கள்கிழமை முதல் 13 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படும். 

பேருந்துகளில் பயணம் செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கட்டாயம் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com