கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருந்த இத்தாலியை பிரேஸில் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்துக்கு வந்துள்ளது.
பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 87 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 36,044 -ஆக உயா்ந்தது. மேலும், புதிதாக 2,907 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,76,494-ஆக உள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 3,02,084 பேர் குணமடைந்துள்ளனர், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 3,38,366 பேர்களில் 8,318 பேர்க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.