திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.57 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோவிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
அதன்படி பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் செவ்வாய்க்கிழமை தேவஸ்தானத்திற்கு ரூ.57 லட்சம் வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.