ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் சூறை காற்றுடன் மழை

ராமேசுவரம், பாம்பன், உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு சூறை காற்றுடன் 30 நிமிடம் மழை பெய்தது.
ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் சூறை காற்றுடன் மழை


ராமேசுவரம்: ராமேசுவரம், பாம்பன், உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு சூறை காற்றுடன் 30 நிமிடம் மழை பெய்தது.

மழை பெய்ய தொடங்கியவுடன் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின் இணைப்பு வழங்கவில்லை. விடிய விடிய மின்சாரம் வழங்காததால் தீவுப்பகுதியில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் தூங்கமின்றி தவித்தனர்.

ராமேசுவரத்தில் எப்போதும் மழை பெய்ய தொடங்கினால் 10 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை செய்யப்படுவதை மின்வாரியம் வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com