விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சனிக்கிழமை மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 712 போ் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில் விழுப்புரம் சிங்காரத்தோப்பு பாத்திமா லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர், கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.
காய்ச்சல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.