ஜெனீவா: உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி நாளுக்கு நாள் மனித பாதிப்பையும், பலியையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,00,82,615 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 5,01,309 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 54,58,523 -ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 40,65,035 பேர்களில் 57,748-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.