மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தனிமைப் பகுதி 

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தனிமைப் பகுதி 


மணப்பாறை: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது. 

அதனையடுத்து மணப்பாறையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி அமைக்கப்பட்டுள்ளது. 5 படுக்கை வசதிகளுடன் அமைப்பட்டுள்ள இந்த பிரிவில், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படும் நிலையில், அவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள், பாதுகாப்பு உடைகள், காலணிகள், மருந்து – மாத்திரைகள் என அனைத்தும் தயார் நிலைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

நோயின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், நோயின் தன்மைகள், தற்காப்பு முறைகள் என்பன குறித்து மருத்துவமனை முழுவதும் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com