கல் குவாரியில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

பெரம்பலூர் அருகே கல் குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மீது மண் சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்து வியாழக்கிழமை
கல் குவாரியில் மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல் குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மீது மண் சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்து வியாழக்கிழமை உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் செம்மலை (36). இவர், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாமல் குவாரியில் செம்மலை வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மண் சரிந்து விழுந்தது. இதில், மண்ணில் புதைந்த செம்மலை நிகழ்டத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, செம்மலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com