கடலூர்: கடலூர் எம்கேஎஸ் கட்டுமான நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீரென அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வந்துள்ள புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.