போடியில் கள்ளக் காதல் தகறாறில் இளைஞர் வெட்டிக் கொலை : பெண் கைது 

போடியில் கள்ளக் காதல் தகராறில் இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
போடியில் கள்ளக் காதல் தகறாறில் இளைஞர் வெட்டிக் கொலை : பெண் கைது 


போடி: போடியில் கள்ளக் காதல் தகராறில் இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

  கேரள மாநிலம் பி எல் ராம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (30) இவருக்கும் போடி நந்தவனம் தெருவை சேர்ந்த வளர்மதி (30) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. 

 வளர்மதிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜாவுக்கும் வளர்மதிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு ராஜா, வளர்மதி வீட்டுக்கு வந்த போது  மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

  இதில் வளர்மதி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜாவை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்தியே ய இறந்து போனார். 

     இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போடி டவுன் போலீஸார் வளர்மதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com