சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28-ம் தேதி விடுமுறை அறிவிப்பு 

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை(மார்ச் 27, 28) விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் 27, 28-ம் தேதி விடுமுறை அறிவிப்பு 

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை(மார்ச் 27, 28) விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாடு ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தை வரும் நாள்களில் வழக்கம்போல் இயங்கும் என்றும், அதேவேளையில் சந்தையில் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (மார்ச் 27, 28) இரு தினங்களுக்கு கோயம்பேடும் காய்கறிச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

காய்கறிச் சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com