கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் உறுதி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. 
coronavirus
coronavirus

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா நோய் இருப்பது உறுதியாகியுள்ளது. 

கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயது ஆண் தொடர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் முடிவு இன்று கிடைக்கப் பெறப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதியாகி இருப்பது இதுவே முதல் முறை.

மேலும் 26 பேர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com