கரோனா: இந்தியாவில் உயிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

கரோனா: இந்தியாவில் உயிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 979-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 


புதுதில்லி: இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 979-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கரோனா நோய்த் தொற்றால் வெளிநாட்டினா் உள்பட 979 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. அவா்களில் 86 போ் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி விட்டனா். 920 போ் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா் என மத்தி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதனிடையே கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com