ஈரோடு சத்தி சாலையில் தற்போது கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோட்டில் கரோனா வைரஸ்க்கு எதிரான யுத்தம் ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் வெற்றிகரமாக நடந்தேறி வருவது மிக்க மகிழ்ச்சி.
சீனாவில் மூன்று வித மருந்து தெளிப்புகள் மூலம் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
* Drone களின் மூலம் Aerial மருந்து தெளிப்பு.
* கை மெஷின்கள் மூலம் மருந்து தெளிப்பு.
* வாகனங்களில் நவீன இயந்திரம் மூலம் மருந்து தெளிப்பு
ஈரோட்டில் அக்னி என்ற தனியார் நிறுவனம், அவர்களிடமிருந்த நவீன கிருமி மருந்து தெளிப்பான் இயந்திரத்தை, வாகனத்தில் ஏற்றி, குளோரின் மற்றும் சோடியம் ஹைப்போ குளோரைடு கலந்த கிருமி எதிர்ப்பு மருந்து கலவையை, மாவட்ட நிர்வாகம் - மாநகராட்சி துணையுடன் ஈரோட்டில் அனைத்து இடங்களிலும் அடித்தனர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு அக்னி என்ற தனியார் நிறுவனம் செய்த உதவியை ஈரோட்டில் உள்ள மற்ற தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பாராட்டினர்.
இது போல் அனைவரும் முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டு கொண்டனர்.