நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானம் கடைவீதியில் தடையை மீறி கூட்டம் கூட்டமாய் நடமாடி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானம் கடைவீதியில் 144 தடையை மீறி சராசரியான நாட்களைப் போலவே கூட்டம் கூட்டமாய் நடமாடி வருகின்றனர். இவர்களால் மற்றவர்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்காவிட்டால் விபரீதம் ஏற்படும்.
தொற்றுநோயால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்ட நிலையில், நோய்த்தொற்றின் அபாயம் புரியாமல் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோய்தொற்றை மற்றவர்களுக்கும் பரப்பும் விதத்தில் நடந்து கொள்ளும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.