தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடா்பாக, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ள சில முக்கிய பணிகள் குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் எந்தெந்த பணிகளுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் என்பது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.