நாகை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. பணி நேரத்தில் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் விவசாய பெண்கள்.
நாகை மாவட்டத்தில் 2 லட்சம் ஹெக்டர் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் வைத்து தற்போது நாகை மாவட்டம் கீழையூர் செம்பதனிருப்பு வில்லியநல்லூர் அருவாபாடி ஆலஞ்சேரி செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றுபறித்தல், நடவுப்பணி, வயல் வரப்புகளை சீரமைத்தல் ,உரமிடுதல் உள்ளிட்ட ஈடுபட்டு விவசாய பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணி நேரத்தில் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக நடவு பணிகளை மேற்கொண்டுள்ள விவசாயப் பெண்மணிகள் நாட்டுப்புறப் பாடல்களை குழுவாக பாடி நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.