சமஸ்திபூர்: பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
பிகார் மாநிலம் முசாபர்பூரிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் கதிஹார் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சமஸ்திபூர் மாவட்டம் சாந்த்சேரில் உள்ள ஷங்கர் சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்த பேருந்து மீது எதிர் திசையில் இருந்து வந்துகொண்டிருந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லாரி ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார்.