காஞ்சிபுரத்தில் சிறுமி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு விதிக்கபட்டது. சென்னை கோயம்பேடு மார்கெட் பகுதியில் பணிபுரிந்து வந்த கூலி தொழிலாளர்கள் பலர் வீடு திரும்பியதால் நோய் தொற்று அதிகரித்தால் ஊரடங்கு கடுமையாக்கபட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் பலர் தங்கள் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை புதிதாக 6 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்றி பாதித்தோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.