மத்திய நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் காவிரி ஆணையம்: ரத்து செய்யக்கோரி திருவாரூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் காவிரி ஆணையம் கொண்டு வரப்பட்டுள்ளதை கைவிடக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் காவிரி ஆணையம்: ரத்து செய்யக்கோரி திருவாரூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்


திருவாரூர்: மத்திய நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் காவிரி ஆணையம் கொண்டு வரப்பட்டுள்ளதை கைவிடக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க வேண்டும், குறுவை தொகுப்பு திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்,  பாசன வடிகால்களுக்கு தடையாக உள்ள வாய்க்கால்களை தூர் வார வேண்டும், பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கரோனா  பாதிப்பில் முடங்கியுள்ள விவசாயிகளுக்கு 2019- 20 ஆம் ஆண்டு நெற் பயிர் காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டை உடன் அறிவித்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியுடன் பங்கேற்ற நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமும்,  வணிகர்களிடமும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com