அம்பான் புயல் எச்சரிக்கை: நாகை, காரைக்கால், தூத்துக்குடி  துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அம்பான் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அம்பான் புயல் எச்சரிக்கை: நாகை, காரைக்கால், தூத்துக்குடி  துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!


அம்பான் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது சனிக்கிழமை இரவு புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் இந்த புயல் நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும். பின்னர் திசையை மாற்றி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். புதன்கிழமை (மே 20) ஆம் தேதி மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அம்பான் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகை, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய மாவட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com