புதுக்கோட்டையில் முகக்கவசம் அணிந்து காய்கறி வாங்க வருபவர்களுக்கு பரங்கிக்காய் இலவசம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு வருவோருக்கு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஒரு மீட்டர் தனிநபர் இடைவெளி கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை ஊக்குவிக்க நூதன முறையை நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
இந்த விதிமுறைகளைக் கடைபிடித்தால் பரங்கிக்காய் இலவசம் என வெள்ளிக்கிழமையே அறிவித்தார் நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன்.
சனிக்கிழமை காலை பரங்கிக்காய் கீற்று போட்டு வெட்டி தயாராக வைத்து, முகக்கவசம் அணிந்து கொண்டு, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றியோருக்கு வழங்கினார் ஆணையர்.