ரியாத்: சவூதி அரேபியாவில் புதிதாக 2,840 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 52,016 -ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளதாவது: சவூதி அரேபியாவில் புதிதாக 2,840 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 52,016 -ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 10 பேர் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது, 1,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,666 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு உலக அளவில் வர்த்தகத்தில் தீவிர மாற்றங்களை தொடர்ந்து ஏற்படுத்தும், வணிக வடிவத்தை மாற்றியமைக்கும் என்று சவுதி கைத்தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பண்டார் பின் இப்ராஹிம் அல்-காரேஃப் சமீபத்தில் தெரிவித்ததாக சவுதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.