சீர்காழி அருகே விளந்திட சமுதிரம் ஊராட்சியில் பல ஆண்டுகள் தேங்கியிருந்த பல டன் குப்பைகளை ஊராட்சிமன்ற தலைவர் ரமணிராஜ் நடவடிக்கையால் ஜெசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளந்திட சமுதிரம் ஊராட்சியில் உள்ள மருதநாயகம் காலனி, ஜாபர் தெரு, வள்ளியம்மை நகர், ஆகிய நகர்களில் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் குப்பைகள் தேங்கி கிடந்தது.
இந்நிலையில், ஊராட்சிமன்ற தலைவர் ரமணிராஜ் நடவடிக்கையால் ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக ஜெசிபி இயந்திரம் மூலம் பல டன் குப்பைகளை அகற்றும் பணி நடந்தது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.