அமராவதி: ஆந்திரம் மாநிலத்தில் மேலும் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,532 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
"ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,532 ஆக உயர்ந்துள்ளது. இதில் 718 பேர் சிகிச்சை பெற்று பெற்று வருகின்றனர், இதுவரை 54 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்" என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,680 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.