தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவர், நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து கடந்த மே 19-ம் தேதி தேனி மாவட்டத்திற்கு வந்த, பாலக்கோம்பையைச் சேர்ந்த வேலுச்சாமி (45) என்பவர், ஆண்டிபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைபடுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த வேலுச்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதலுதவி அளித்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.