சிதம்பரத்தில் தமாகா சார்பில் தட்டு வண்டி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை சிதம்பரம் வடக்கு வீதியில்
சிதம்பரத்தில் தமாகா சார்பில் தட்டு வண்டி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி


சிதம்பரம்: கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை சிதம்பரம் வடக்கு வீதியில் தட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்  200 நபர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி போன்ற  நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ் கார்த்திகேயன்  கலந்துகொண்டு  நிவாரணப் பொருள்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

மாவட்டத் தமாகா தலைவர் எஸ்.புரட்சிமணி  ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு நகர தலைவர் தில்லை ஆர்.மக்கின் தலைமை வகித்தார். மாவட்ட  இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த்,மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா சம்பத்குமார், எஸ்.கே.வைத்தி,மாவட்ட  பொதுச் செயலாளர் கே. நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள், எம்.கே.பாலா, சேதுமாதவன், மாவட்ட  தொண்டரணி தலைவர் மற்றும் ஆட்டோ சங்க பொருளாளர் கோ.குமார் , நகர பொருளாளர் எஸ்.எஸ்..நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  .

நிகழ்ச்சியில் நகர துணைத்தலைவர் இளங்கோவன், ஆர்.வி.சின்ராஜ்,மாவட்ட செயலாளர் என்..பாண்டு, மாணவரணி தலைவர் என்.மணிகண்டன், நகர இளைஞரணி தலைவர் துரை சிங்காரவேல், மாவட்ட மகளிரணி தலைவி கே.ராஜலெட்சுமி, மாவட்டச் செயலாளர் கே.செல்வி,நகர மகளிரணி தலைவி மீனா செல்வம், மாவட்ட துணைத் தலைவி,கோ.ஜனகம்,மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் மாலா,அழகர் மாலா ,நகர செயலாளர் கீரை முருகன் ,இளைஞரணி நிர்வாகிகள் ராதா,ராஜ்குமார்,குமராட்சி வட்டார தலைவர் பகவத்சிங் மற்றும்  செந்தமிழரசன்,மணவாளன்,தினேஷ்குமார்,பிரவின் குமார்,சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com