திருச்சி: விளையாட்டு பயிற்சிக்கு சென்னை சென்று திரும்பிய திருச்சி காவலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அரசு மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் அவரது குடும்பத்தையும் அந்த பகுதியையும் தனிமைப்படுத்தி மற்றவர்களுக்கு பரவாமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி 1வது பட்டாலியனிலிருந்து சென்னைக்கு விளையாட்டு பயிற்சிக்கு (ஸ்போட் ஸ்மீட்டுக்கு) கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். கரோனா நோய் பரவல் காரணமாக விளையாட்டுப் பயிற்சி நடைப்பெறவில்லை அதனால் திருச்சி 1வது பட்டாலியனுக்கு அந்த காவலரை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
அப்படி சென்னையில் இருந்து கடந்த 19 ஆம் தேதி திருவெறும்பூர் காவேரிநகர் பகுதியில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்தவரை பரிசோதனை செய்ததில் கரோனா நோய் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரதுவீட்டில் 21 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை தனிமைபடுத்திக்கொள்ள விழிப்புணர்வு நோட்டீசையும் ஒட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட காவலரின் தந்தை சிஆர்பிஎஃப் காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது