நாடு முழுவதும் புதிதாக 6,088 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,18,447-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 148 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 3,583-ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் புதிதாக 6,088 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,18,447-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6088 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48,534 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வியாழக்கிழமை 3,234 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கரோனா நோய்த்தொற்றுக்கு அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் இதுவரை 41,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,454 போ் பலியாகினா். இதேபோல், குஜராத்தில் 12,905 பேரும், தமிழகத்தில் 13967 பேரும், தில்லியில் 11659 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.