ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 மற்றும் 23 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு இடங்களில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநகரப் பகுதியில் உள்ள 56 அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தது.