திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது 

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து சனிக்கிழமை அதிகாலை காவலர்கள் கைது செய்தனர். 
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது 


சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து சனிக்கிழமை அதிகாலை காவலர்கள் கைது செய்தனர். 

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.  

அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com