திருத்துறைப்பூண்டி பெரிய சிங்களாந்தி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் விஷ்ணுப் பிரியன் (15) அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களது புதிய வீடு கட்டுமானப்பணி நடைபெறும் பகுதியில் இருந்த தண்ணீர் இறைக்கும் மின்மோட்டாரை இயக்கி குளித்து விட்டு ஈரக்கையுடன் சுவிட்ச் ஆப் செய்த போது மின்சாரம் தாக்கி விஷ்ணுபிரியன் நிகழ்விடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.