தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த 4 பேர் வீடு திரும்பினர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். 36 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். இன்று காலை நிலவரப்படி 113 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த 4 பேர் இன்று ( 23.5.2020 ) பிற்பகலில் வீடு திரும்பினர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், மருத்துவமணை நிர்வாகம் காலை தெரிவித்துள்ள கணக்கீட்டின் படி 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் பழங்களை கொடுத்து, 14 நாள்கள் வீடுகளில் இருவரும் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தி அவர்களை வழியனுப்பி வைத்தார்.