விழுப்புரம் அருகே அரசூர் ஊராட்சி பொய்கை அரசூர் கிராமத்தில் வெள்ளிகிழமை, பிரட் பேக்கரி பொருட்களை சிலர் தெருக்களில் விற்பனை செய்துள்ளனர்.
அதனை வாங்கி சாப்பிட்ட அப்பகுதி சிறுவர்கள் 15 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இரவு விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.