ராஜஸ்தானில் மேலும் புதிதாக 52 பேருக்கு தொற்று: மொத்த பாதிப்பு 6,794 ஆக உயர்வு

ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மேலும் புதிதாக 52 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6,794 ஆக உயர்ந்துள்ளது,
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மேலும் புதிதாக 52 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6,794 ஆக உயர்ந்துள்ளது, ஒருவர் பலியாகியுள்ளார், இதனால் பலி எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  

புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 52 பேர்களில் அதிகபட்சமாக அஜ்மீர் மற்றும் ஜெயட்ப்பூரில் இருந்து தலா 18 பேர், நாக்பூர் மற்றும் துங்கர்பூரில் இருந்து தலா 4 பேர், பிகானேர் மற்றும் பார்மரில் இருந்து தலா 2 பேர் மற்றும் ஜுன்ஜுனு, கோட்டா, தவுசா மற்றும் ஜோத்பூரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தற்போது, மாநிலத்தில் 2,829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து மாநிலத்தில் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து  வீடு திரும்பியோரின் எண்ணிக்கை  3,373 ஆக அதிகரித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com