திருப்பூர் நொய்யல் ஆற்றில் கார் கவிழ்ந்தது: அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்

திருப்பூர் நொய்யல் ஆற்றில் கார் கவிழ்ந்தது: அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்

கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.


கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

திருப்பூரில் மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி (30), இவர் கடந்த சனிக்கிழமை காலை திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் உள்ள வளம் பாலம் அருகே காரில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த நொய்யல் ஆற்றில் கவிழ்ந்தது. 

இதுகுறித்த தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த காரில் சிக்கிய அழகர்சாமியை மீட்டனர். எனினும் அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com