பவானியில் 250 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் விநியோகம்

பவானி காவேரி வீதி கல்மடம் ஸ்ரீ கே.ராஜாராவ் அன்னதான அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய 250 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
பவானியில் 250 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் விநியோகம்

பவானி: பவானி காவேரி வீதி கல்மடம் ஸ்ரீ கே.ராஜாராவ் அன்னதான அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய 250 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்.ஜெயசீலன், ஆர்.பிரசன்னா, கே.ஸ்ரீனிவாசன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினார். 

காவிரி வீதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏழை, எளிய குடும்பத்தினர் 250 பேருக்கு அரிசி, பருப்பு வெல்லம் மற்றும் மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன. பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஆய்வாளர் ரவிக்குமார், மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிவாரண உதவிகளை வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ், அறக்கட்டளை நிர்வாகி ஸ்ரீனிவாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com