தற்போதைய செய்திகள்
பிரிக்ஸ் மாநாட்டில் மோடி நாளை பங்கேற்பு
12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் நாளை(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் நாளை(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
ரஷியா அதிபர் புடின் அழைப்பின் பேரில், நாளை காணொளி மூலம் நடைபெற உள்ள 12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார்.
மேலும் இந்த மாநாட்டில், கரோனா தொற்று, உலகளாவிய முக்கிய பிரச்னைகள் போன்றவற்றை குறித்து விவாதிப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.
நாளை நடைபெறும் 12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
காணொளி முறையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனா சாா்பில் அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.