ஒடிசாவில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் பத்மநாபா பெஹ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் பத்மநாபா கூறுகையில்,
ஒடிசாவில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.