வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அரிய வகை உயிரினமான கடற்பன்றி ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை (நவ.22) தெரிய வந்தது.
கோடியக்கரை கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலைையில் சுமார் 4 அடி நீளமுள்ள கடற்பன்றி ஒன்று கரை ஒதுங்கியது.
தகவல் அறிந்த வனத்துறை அலுவலர் சதீஸ் தலைமையிலான கோடியக்கரை வனத்துறையினர் இறந்த கடற்பன்றியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
கால்நடை மருத்துவக் குழுவினரைக்கொண்டு உடற்கூறு ஆய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.