புதுச்சேரி வடக்கே நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி வடக்குப் பகுதியில் அதிதீவிரப் புயலாக மாறியது. புதுச்சேரிக்கு வடக்கே 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
கரையை கடக்கும் நிலையில் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் பலத்த கனமழை பெய்து வருகிறது.
புயல் முழுவதுமாக கரையை கடக்க அதிகாலை 3 மணியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 120 முதல் 140 கி.மீ. வரை காற்று வீசித் தொடங்கியுள்ளது.