சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் போடப்பட்டிருந்த இரும்புப் பாதை கனமழை காரணமாக விழுந்ததில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஏற்பட்ட பள்ளம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ஏற்பட்ட பள்ளம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போடப்பட்டிருந்த இரும்புப் பாதை கனமழை காரணமாக விழுந்ததில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.

சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் எதிரே சாலையை கடப்பதற்காக இரும்புப் பாதை போடப்பட்டிருந்தது. நகரின் முக்கிய சாலையில் இருந்த இந்தப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக பெய்து வந்த கனமழையால் அந்த பாலம் இடிந்து விழுந்து 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இதனை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com