திருவனந்தபுரத்தில் சர்வதேச வைராலஜி நிறுவனத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
வைராலஜி நிறுவனத்தை காணொளி மூலம் திறந்து வைத்து பேசிய பினராயி,
இந்த நிறுவனம் சுகாதாரத் துறை ஆராய்ச்சியில் உலக தரம் வாய்ந்ததாக இருக்கும். இது போன்ற வலுவான பொது சுகாதார அமைப்பு மூலம் நிபா மற்றும் கரோனா போன்ற கொடிய நோய்களை தடுக்க முடியும் என கூறினார்.